தற்சார்பு - 8 - பரிதி
தற்சார்பு - 8 - பரிதி படிக்க ஆகும் நேரம் - 4:50 நிமிடங்கள் "அறிவியலும், பகுத்தறிவும்..." சுய அறிவின் வழி சிந்திப்பதே தற்சார்பின் தொடக்க நிலை என்பதை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். அப்படியான ஒரு மிக மோசமாக நம் கால்களை பற்றி இருக்கும் இரு விலங்குகளைப்பற்றிதான் இந்த கட்டுரையும். "மூடநம்பிக்கை எனும் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள். ஒன்று, பகுத்தறிவு. மற்றொன்று, அறிவியல்" என்று இயற்கை வழி வாழ்வியல் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள் சொல்கிறார். பகுத்தறிவும்,அறிவியலும் தான் மூடநம்பிக்கையெனும் இருளை வெளிச்சமிட்டு விரட்டியதாக நமக்கு சொல்லிக்கொடுத்தார்கள், நாமும் படித்தோம். ஆனால் ஐயாவின் இந்த வார்த்தைகள் மிகவும் ஞானம் செறிந்தவை... பகுத்தறிவு, அறிவியலைப்பற்றி ஐயா நம்மாழ்வார் அவர்கள் கூறிய மற்றொரு கருத்தையும் இங்கே சொல்வது சிறப்பென நினைக்கிறேன். "பகுத்தறிவும்,அறிவியலும் முழுமைபெறாத ஒன்று!" என்பார். எப்படி என்ற கேள்வியுடன் தொடங்குவோம். முதலில் அறிவியலைப் பேசுவோம்... ஆரம்ப கால அலைபேசியை நினைத்து கொள்ளுங்கள். அது எந்த வடிவில் இருந்தது, அதில் இருந்த...