இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தற்சார்பு - 8 - பரிதி

தற்சார்பு - 8 - பரிதி படிக்க ஆகும் நேரம் - 4:50 நிமிடங்கள் "அறிவியலும், பகுத்தறிவும்..." சுய அறிவின் வழி சிந்திப்பதே தற்சார்பின் தொடக்க நிலை என்பதை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். அப்படியான ஒரு மிக மோசமாக நம் கால்களை பற்றி இருக்கும் இரு விலங்குகளைப்பற்றிதான் இந்த கட்டுரையும். "மூடநம்பிக்கை எனும் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள். ஒன்று, பகுத்தறிவு. மற்றொன்று, அறிவியல்" என்று இயற்கை வழி வாழ்வியல் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள் சொல்கிறார். பகுத்தறிவும்,அறிவியலும் தான் மூடநம்பிக்கையெனும் இருளை வெளிச்சமிட்டு விரட்டியதாக நமக்கு சொல்லிக்கொடுத்தார்கள், நாமும் படித்தோம். ஆனால் ஐயாவின் இந்த வார்த்தைகள் மிகவும் ஞானம் செறிந்தவை... பகுத்தறிவு, அறிவியலைப்பற்றி ஐயா நம்மாழ்வார் அவர்கள் கூறிய மற்றொரு கருத்தையும் இங்கே சொல்வது சிறப்பென நினைக்கிறேன். "பகுத்தறிவும்,அறிவியலும் முழுமைபெறாத ஒன்று!" என்பார். எப்படி என்ற கேள்வியுடன் தொடங்குவோம். முதலில் அறிவியலைப் பேசுவோம்... ஆரம்ப கால அலைபேசியை நினைத்து கொள்ளுங்கள். அது எந்த வடிவில் இருந்தது, அதில் இருந்த...

தற்சார்பு – 7 – பரிதி

தற்சார்பு – 7 – பரிதி படிக்க ஆகும் நேரம் – 6.40 நிமிடங்கள் "Meme Creators எனும் மடையர்களும், சுய அறிவும்…" Meme Creatorகளால வீட்ல சும்மா இருக்க முடியலன்னா ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் தூக்கமாத்திரை போட்டுட்டு தூங்கிடுங்க. கை பரபரன்னு இருந்தா பூசாத தரையில வச்சு தேச்சுக்கங்க. அதைய விட்டுட்டு உங்களுக்கு தெரிஞ்ச அரைகுறை விசயத்த வடிவேலுவ வச்சு ரெண்டு வரியில எழுதி ஒரு படத்த உருவாக்கி Likeக்குக்கும் commentக்குக்கும் shareக்குக்கும் அலஞ்சு இணையத்துல விட்டுட்டு மொகத்துல பெரும பேயாட உக்காந்திட்டு இருக்கூடாது. உங்க மனசுக்குள்ள எவனோ வந்து நீங்க சமூக்கடமை செய்யுறதா பதிய வச்சுட்டானுங்க. அதுல இருந்து மொதல்ல வெளிய வாங்க. நீங்க எழுதுற ரெண்டுவரி பதிவுக்குள்ள இருக்குற பொய்ய தெளிய வைக்க இங்க உக்காந்து ரெண்டு பக்கத்துக்கு கட்டுரை எழுதவேண்டிகெடக்கு. ரெண்டுவரிய முழுசா படிச்சு அந்த பொய்ய முழுசா எடுத்துகிட்டவங்களுக்கு இந்த ரெண்டு பக்க கட்டுரைய படிக்க நேரமும் இருக்குறதில்ல, விருப்பமும் இருக்குறதில்ல. அவுங்கள படிக்கவைக்க என்னெல்லாம் செய்யவேண்டி இருக்கு தெரியுமா… · உண்மைய ...

தற்சார்பு – 6 – பரிதி

தற்சார்பு – 6 – பரிதி படிக்க ஆகும் நேரம் – 3.30 நிமிடங்கள் “வாழ்வு என்றால் என்ன?” “தகவல்கள் அறிவு ஆகாது(Informathion is not knowledge)” என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உங்களைச்சுற்றி பலவகைகளில், பலவழிகளில் பல தகவல்கள் இருக்கிறது. உங்களுக்குள் கொடுக்கவும்படுகிறது. அது எதுவும் அறிவாகாது. சரி, எப்போது ஒரு தகவல் அறிவாகிறது? ஒரு தகவல் உங்களின் உணர்வோடு எப்போது சேர்கிறதோ அப்போது அது அறிவாகிறது. ஐன்ஸ்டீன் சொன்னது, இப்போது உங்களுக்கு வெறும் தகவல். எப்போது இதை நீங்கள் உணர்கிறீர்களோ அப்போது உங்களுக்குள் அது அறிவாகிறது. அதனால்தான் இறைவி சிந்தனைக்களம் தற்சார்பு எனபதை உங்களுக்கு வெறும் தகவலாக கொடுக்காமல், அறிவாக கொடுக்க முயற்சி செய்கிறது. திரும்பத்திரும்ப சொல்கிறேன், தற்சார்பு என்பது ஒரு எளிய தத்துவம். இயற்கை என்ற இந்த அமைப்பை நீங்கள் புரிந்துகொள்ளும்போது அது உங்களுக்கு புலப்படும். “வாழ்வு என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ஐயா நம்மாழ்வார் அவர்கள் அளித்த பதிலைக்கொஞ்சம் பாருங்கள்… “மரணத்தை எப்படி தள்ளிபோடுகிறோம் என்கிற அறிவும், அதற்கான செயலும்தான் வாழ்வு” என்கிறார். கொஞ்சம் யோசித்த...

நம்மாழ்வார் உரை

ஈரோடு புத்தகத்திருவிழாவில் 2013ம் ஆண்டு ஐயா நம்மாழ்வார் அவர்கள் பேசிய உரையின் சுருக்கவடிவம். இறைவி சிந்தனைக்களத்தின் நோக்கம் உங்களை உழவுச்சிந்தனைக்கு கொண்டுவருவதல்ல. இப்போதுள்ள சூழலில் உங்களுக்குள் தானாக அப்படி ஒரு சிந்தனை உதிக்காதபோது யாராலும் அதைத்தரமுடியாது என்பதை அறிவோம். மாறாக உங்களுக்குள் தற்சார்பு குறித்த சிந்தனையை உளவியல்பூர்வமாகவும், தத்துவப்பூர்வமாகவும் கொண்டுவந்து சேர்ப்பதே. வேளாண் அற்ற தற்சார்பா என்று உங்களின் கேள்விக்கு இனிவரும் தற்சார்பு எனும் கட்டுரைகள் பதில் த ரும். அதனால், ஐயாவின் இந்த உரையை அதற்கு தகுந்தாற்போல் சுருக்கியுள்ளது இறைவி சிந்தனைக்களம். முழுமையாக கேட்க வேண்டுகிறேன். பேரன்புகள்! - இறைவி சிந்தனைக்களம் உரையைக்கேட்க இங்கே அழுத்தவும்  

"நம்மாழ்வார்" - பரிதி வருங்கால உழவன் (கவிதை)

"நம்மாழ்வார்" - பரிதி வருங்கால உழவன் தன்னை உதிர்த்து மண்ணை உயிர்த்தவன்! ஒவ்வோர் உயிர்க்குள் தன்னைக் கரைத்தவன்! உழவன் யார்க்கும் உறவாய்த் தெரிபவன்! மண்ணைக் காக்கவே மற்போர் கண்டவன்! மந்தையைக் காட்டி சிந்தையைத் தெளிவித்தான்! தந்தையைப்போல தாய்மண் அதைக் காத்தான்! மரபின் வழியை யார் மறித்தாலும்... இவன் விழி அவனை எரிக்கும்! இயற்கையை மாற்றும் சொல்லெழுந்தாலே... பதில் மொழி அனலாய்த் தெறிக்கும்! பாலைக்கொடுத்து உயிரை வளர்க்கும் நம்வீட்டின் பசு! இவன், பயிர் வளர்க்கவே உயிரை இழந்த இம்மண்ணின் சிசு! அன்று நீயும் நானும் அறியாதவன்... இன்று உனக்கும் எனக்கும் முதலிறைவன்! இதுவரை நான் அவரைக் கண்டதில்லை! அதனால், அவர் இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை! என்னளவில்... அவர் எழுத்தே உரு! உன் சிந்தையே கரு! அவரை இயற்கை வேளாண் விஞ்ஞானி எனச்சொல்வது அவரது பேரறிவை சுருக்கும் செயல். ஆகச்சிறந்த அறியாமை. இதை இறைவி சிந்தனைக்களம் கடுமையாக எதிர்க்கிறது. ஒட்டுமொத்த வாழ்வியலையும் பேசிய பேரறிஞன். தனது பேச்செங்கும், வாழ்வெங்கும் தத்துவங்களை இறைத்து வாழ்ந்த தமிழ் இறை. அ...

தற்சார்பு – 5 – பரிதி

தற்சார்பு – 5 – பரிதி படிக்க ஆகும் நேரம் – 4.30 நிமிடங்கள் “இயற்கையின் விதி?” காலம், கி.மு.90 - 300களில்... தாலமி கூறினார் “புவியே மையம். புவியைச்சுற்றிதான் மற்ற கோள்களும், சூரியனும் சுற்றிவருகிறது” என்று. இந்த கருத்தைத்தான் உலகின் பெரும்பான்மையினர் நம்பி வந்தனர். அதுமட்டுமல்லாது தாலமியின் கூறு மதக்கோட்பாடாகவும் இருந்துவந்தது. அதன்பின் வந்த அரிஸ்டாடில் பூமிக்கும் நிலவுக்கும் இடையில் புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன் போன்ற நிலையான கோள்கள் இருந்து புவியை மையமாகக்கொண்டு சுற்றுவதாக புவி மையக்கோட்பாட்டை வைத்தார். காலம், கி.பி.1300 - 1500களில்... கோபர் நிகஸ் தனது சூரியமையக்கோட்பாட்டினை முன்வக்கிறார். மதமும் ஏற்கவில்லை, அவர் தனது நூலை இலத்தினில் எழுதியிருந்ததால் மக்களிடமும் போய்ச்சேரவில்லை. அவரின்பின் வந்த கலீலியோ கலிலி தனது தொலைநோக்கியால் அதை நிறுவ முயல்கிறார். ஆனால் மத அடிப்படைவாதிகள் ஏற்க மறுக்கின்றனர். இது எட்டாம் போப் அர்பனை தாக்குவது போல் தோன்றியதால், கலீலியோ கலிலி புலன் விசாரனைக்கு உள்ளாக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இப்போது சூரி...

தற்சார்பு – 4 – பரிதி

தற்சார்பு – 4 – பரிதி  படிக்க ஆகும் நேரம் – 4 நிமிடங்கள் “விவசாயத்தில் நிறுவன நடைமுறை” ஒரு தொலைக்காட்சிப்பெட்டி குறைந்தபட்சம் 15ஆண்டுகள் வேலைசெய்யும் என்று வைத்துக்கொள்ளுங்கள். 15ஆண்டுக்கு ஒரு குடும்பம் அந்த தொலைக்காட்சிப்பெட்டி தயாரித்த நிறுவனத்தோடு தொடர்பில் இருக்கப்போவது இல்லை. ஆனால், அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு கோடீசுவரர். ஒரு ஆடையை, குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு நாம் பயன்படுத்துவோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஒரு ஆண்டுக்கு அந்த ஆடை தயாரித்த நிறுவனத்தோடு நாம் தொடர்பில் இருக்கப்போவது இல்லை. ஆனால், அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு கோடீசுவரர். நம் ஒவ்வொருவருக்கும் உணவு வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு மூன்று முறை வேண்டும். ஆனாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயி மேல் சொன்ன முதலாளிகளை விட ஏழை. எளிய கேள்வி… ஏன்? அவர்களிடமுள்ள நிறுவனமுறை இவர்களிடத்தில் இல்லை. Organizational Structureல் Line Organizational Structure என்று ஒன்று உண்டு. அதில் ஒரு CEO இருப்பார். அவரின்கீழ் ஒரு Manager இருப்பார். அவரின்கீழ் ஒரு Department Supervisor இருப்பார். அவரின்கீழ் ஒரு Depa...

தற்சார்பு – 3 – பரிதி

தற்சார்பு – 3 – பரிதி படிக்க ஆகும் நேரம் – 4.30 நிமிடங்கள் “வியாபாரிகள் விவசாயிகள் அல்ல” முதல் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன் “விவசாயத்தை வியாபரிகள் கையிலெடுப்பதற்குள் நீங்கள் கையிலெடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஐயா நம்மாழ்வார் சொல்லியிருந்ததை. உங்களைச்சந்திப்பவர்கள் இடைத்தரகர்களே. அவர்கள் விவசாயிகள் அல்ல வியாபாரிகள். “ உழுது விதைத்து அறுப்பார்க்கு உணவில்லை பொய்யைத்தொழுது அடிமை செய்வார்க்கே செல்வம் எல்லாம் உண்டு ” என்பது பாரதியின் வரிகள். அவன் எழுதிய காலத்திலிருந்து இந்த நிலைமை அப்படியே உள்ளது என்பது வருந்தத்தக்கது. நீங்கள் சாதாரணமாக மளிகைக்கடையில், பல்பொருள் அங்காடி(super market)ல் நடக்கும் வியாபாரத்தைம், அதன் ஏமாற்றையும் பற்றித்தான் மறுபடியும் இங்கேயும் பேசப்போகிறேன் என்று நினைத்துவிடவேண்டாம். அதைத்தாண்டிய ஒரு வியாபாரம் இங்கு உள்ளது. அதுதான் ORGANIC STORE வியாபாரம். இதை வியாபாரம் என்று பேசினால் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வருவார்கள். அவர்கள் எல்லோரும் புனிதர்கள் இல்லை. அவர்களைப் பார்த்து நான் வைக்கும் கேள்விகள்... · தற்சார்பு பேசும் உங்களு...

தற்சார்பு – 2 – பரிதி

தற்சார்பு – 2 – பரிதி படிக்க ஆகும் நேரம் – 4.15 நிமிடங்கள் “படைப்பின் உணவுத்தத்துவம்” காலில் இருக்கும் சங்கிலியை உடைத்தெறிவது முதல் தேவை. நடக்கமுயல்வது இரண்டாவது வேலை. நாம் ஒன்றும் உலகின் தொடக்கத்தில் இல்லை, இடையில் இருக்கிறோம். நமது கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறை மாற்றப்பட்டிருக்கிறது. காலையில் கண்விழித்து, இரவு உறங்கும் வரையிலும் நமது எல்லா தேவைகளையும் வியாபாரிகளின் கைகளில் ஒப்படைத்து வைத்திருக்கிறோம். ஒரே இரவில் அதிலிருந்து விடுபடும் நிலையில் இங்கு யாரும் இல்லை. அதற்காக அங்கிருந்து விடுபடவே முடியாது என்கிற சூழலும் இங்கில்லை. ஒரு கூட்டத்தை பயன்படுத்த தெரிந்தவன் வியாபாரியாகிறான். அதே கூட்டத்தில் பங்கேற்பவன் நுகர்வோராகிறான். ஒரு திருவிழா கூட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த கூட்டத்திலிருப்பவரின் பசியை பயன்படுத்த தெரிந்தவன் அங்கு உணவகம் வைத்திருப்பான். அதே கூட்டத்தில் வேடிக்கை பார்க்கச்சென்றவன் சாப்பிட்டுக்கொண்டிருப்பான். இதை சகல இடத்திற்கும் பொருத்திப்பார்த்துக்கொள்ளுங்கள். கல்விக்கூடங்களில் ஒரு கூட்டம் இருக்கிறது. அங்கு எழுதுகோல் தொடங்கி மடிக்கணினிவரை விற்...

தற்சார்பு – 1 - பரிதி

தற்சார்பு – 1 - பரிதி படிக்க ஆகும் நேரம் - 3.30 வினாடிகள் “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்” இந்த கிருமித்தாக்குதலால் ஒரு பக்கம் உலகில் பொருளாதாரச்சண்டை, வல்லாதிக்க நுண்ணரசியல்(micro politics) சண்டை. நாட்டிலோ இந்து இசுலாமிய சண்டை, சலுகைசார் முதலாளிய(crony capitalism)சண்டை, மண்சார் மருத்துவமா? அயல் மருத்துவமா? என்ற மருத்துவசிகிச்சைமுறை சண்டை, வாழ்வியல்முறை குறித்த சண்டை இது எல்லாம் பேசுபொருளாகியிருக்கிறது. என்னளவில் தற்சார்புகுறித்து பேச இதுஒரு சரியான தருணமாகத்தெரிகிறது. முன்னொரு காலத்தில் அவ்வளவுபெரிய நிலத்தை வைத்து யானைகட்டி போரடித்த நாம் இன்று கறிவேப்பிலைக்குக்கூட கடையைத்தேடுவது நல்ல நகைமுரண். தற்சார்பு என்றவுடன் மூன்றுநாள் பயிற்சி, ஐந்துநாள் பயிற்சி என்று சொல்லி மூவாயிரம், ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டு நடத்துவது குறித்தோ, அந்தப்பெருமகன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் படத்தைவைத்து சிறுதானியங்களை உங்கள் கைகளில் சேர்க்கிறோம் என்று பேசி அதன் விலையை ஏற்றி வைத்து நம்மிடம் காசு பார்க்கும் கீழ்த்தரமான வியாபாரத்தைப்பற்றியோ பேசப்போகிறேன் என்று நினைத்துவிடவேண்டாம். தான் வ...

நம்மாழ்வார் போற்றி..! (பாடல்)

நம்மாழ்வார் போற்றி..! பாடல் : தற்சார்பு மெட்டு, வரிகள், குரல் : பரிதி தோட்டம் செடிகளின் கூட்டம் அதில் நமை நாளும் கரைத்திடுவோம் பாடும் பறவைகளோடும் உணவினை நாமும் பகிர்ந்திடுவோம் செம்பருத்தி பூவோடு துளசி இலை சேர்த்து வண்ண சர்க்கரையும் போட்டு - நல் வெந்நீரின் சூட்டோடு கொதித்து விளையாடும் - அந்த குமிழிகளின் ஆட்டம் கோப்பையில் அதை ஊற்றி இதழில் சிறுசூடுணர்ந்து நினைவில் சில யுகம் கடந்து கண்மூடி காணும் அந்த கனவில் ஆனந்தம் இந்த உடலில் ஒரு தெம்பும்... ஆகாத குடமெடுத்து மண் நிரப்பி விதைபோட்டு தக்காளி பச்சை மிளகாய் கத்தரி கறிவேப்பிலை வெத்தல அவரக்கொடிக்கு சொவரக்கொடுக்கலாம் பாவக்கா பந்தலுக்கும் பீர்க்கங்காய் புடலைக்கும் ஒரு ஓரம் வீட்டில் இடமும் ஒதுக்கலாம் மருதாணி இலையா சுண்டச்செடியா நம்ம வாசலில் நிறுத்தனும் கத்தாழ சோத்துக்கும் சிறுகீரைக்கும் ஒருதொட்டியக்கொடுக்கனும் ஊரே அடங்கும்போதும் உனக்காய் வளரும் உசுர வீட்ட சுத்தி வளர்க்கனும்... சாமி வீட்ட சுத்தி வளர்க்கனும்... - இறைவி சிந்தனைக்களம் பாடலைக்கேட்க இங்கே அழுத்தவும்...  

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

அ பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? [ பொதுவாக எனக்கிருக்கும் சில பழக்கங்களில் ஒன்று தனிமையில் இருக்கும்போது கண்களை மூடிக்கொண்டு மனதுக்கு பிடித்த யாரோடாவது மனதுக்குள் பேசத்தொடங்குவேன். எப்போதாவது நிச்சயம் உங்களோடும் பேசியிருப்பேன். பெரும்பாலானோருக்கு இது ஒரு பழக்கம்தான். அப்படி ஒரு முறை திருவள்ளுவரோடு பேசியபோது திருக்குறளில் எனக்கிருக்கும் ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டதற்கு அவர் தந்த பதில்தான் இந்த கட்டுரை… ]                               “ஐயா, உலகப்பொதுமறை தந்த உங்களுக்கு வாழ்வியலின் சகல விடயங்களையும் பேசவேண்டிய தேவை இருக்கும் என்பது எனக்குப்புரிகிறது. ஆனால், உலகின் நடைமுறைகளைத்தாண்டி ஞானத்தின் பாதையை அறிந்த நீங்கள் ஒன்றை தவறாக எங்களுக்கு சொல்லிச்சென்றிருப்பதாக நான் உணர்கிறேன்” என்றேன் நான். “அப்படி என்னப்பா, கொஞ்சம் எனக்கு விளக்கமாகச்சொல்…” என்றார் திருவள்ளுவர். 247வது குறளாக வரும்… அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு இவ்...