கூட்டம் உங்களுக்கு தெரிந்த அளவில் கூட்டம் என்றவுடன் எந்தெந்த இடங்களெல்லாம் நினைவுக்கு வரும்..? 1)சந்தை, நியாயவிலைக்கடை, பல்பொருள் அங்காடி, பேருந்து நிலையம், கோயில்... 2)பள்ளிக்கூடம், கல்லூரி, திரையரங்கம், ஆன்மிக சொற்பொழிவு... ஏன் இரண்டாக பிரித்து எழுதியிருக்கிறேன்? முதலாவதாக இருப்பது தனிமனித மனம் இயங்கிக்கொண்டிருக்கும் இடங்கள். அங்கு எல்லோருக்கும் பொருந்தும் ஒரு பொதுவிடயத்தை அவர்கள் மத்தியில் சொல்ல முடியாது. ஆனால், இரண்டாவதாக உள்ள இடங்களில் எல்லோருக்குமான ஒரு பொதுவிடயத்தை உங்களால் பேசமுடியும். பள்ளி - கல்லூரியில், ஒரு ஆசிரியர் பேசுவார், 60 மாணவர்கள் கேட்பார்கள். இங்கு தலைமை, ஆசிரியர். திரையரங்கின் திரையில் ஒரு இயக்குனரின் சிந்தனை நடிகரின் வழி பேசும், 500 பேர் அமைதியாக பார்த்தும் கேட்டும் இரசிப்பர். இங்கு தலைமை, நடிகர். ஆன்மிக சொற்பொழிவும் அப்படித்தான். இங்கு தலைமை, ஆன்மிகவாதி. ஒரு அரசியல்வாதிக்கு இப்படியான கூட்டமே தேவை. அதுதான் அவர்களின் மூலதனம். சிலநேரங்களில் அவர்களுக்காகவே கூடும் கூட்டத்தை பயன்படுத்துவர். இன்னும் தேவைப்படும்போது இரண்டாவதாக சொல்லப்பட்ட இடங்களின் தலைவ...