இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரூமி

படம்
  எனது வாழ்வின் இறுதியில் இன்னும் ஒரு மூச்சே மீதமுள்ளது எனும் நிலையில் நீ வந்தால் நான் எழுந்து உட்கார்ந்து உனக்காக பாடுவேன்   - ரூமி  

இலையுதிர்காலம் - பரிதி

படம்
  கிளை விட்டதிலிருந்தே வாடிக்கைதான் எங்கிருந்தோ வந்தமர்வதும் எங்கேயோ பறந்து போவதும்   பேசிக்கொண்டதில்லை பேச்சின் அவசியங்களும் இல்லை கீச்சிசை போதுமெனக்கு   கூடுகட்டத்தொடங்கியது, ஏதோவொரு மகிழ்ச்சி... குஞ்சு பொறிகக்கத்தொடங்கியது, உள்ளூர ஆனந்தம்... கிளை உதைத்துப்பறக்கும்போது, வேரின் நுனியில் கசியும் இன்பமெடுத்து மண் வரைந்த ஓவியத்தை ஏதோவொரு செடியில் நீங்களும் பூவாகப்பார்த்திருப்பீர்கள்...   காடளந்த சிறகை காணமுடிவதில்லை வெற்றுக்கூடுகள் கீச்சிடுவதில்லை போகட்டும், என் இலையுதிர் காலத்திற்கு காரணம் கேட்டது யார்..?   - பரிதி  

ஓர்மை - பரிதி

படம்
குழந்தை என்பது தாயின் பிண்டத்துண்டு   ஆதிப்பெண்ணின் இரத்தவாடைக்கே அன்பென்று பெயரிட்டோம்   அதை வாழும் பிற உயிரில் காணும்போது மூதாதை எனக்கொண்டோம்   சதையின் புடைப்பைத்தாண்டி ஆண் பெண் என்பதெல்லாம் தன்மை மாறுபாடேயன்றி வேறில்லை..!   விதையின் வேர்பிடிப்பைத்தாண்டி பறந்தாலும், நடந்தாலும் ஊர்ந்தாலும் பேதமில்லை   தன்மையே நமது பேதம், ஓர்மையே இறையின் வேதம்..!   - பரிதி     நன்றி படம் : இணையம்

முழுமை - பரிதி

படம்
முழுமை - பரிதி எங்கிருந்தோ எனக்கு கட்டளைகள் வருகின்றன... காற்று, அதன் ஊடகமாக இருக்கலாம்... காட்சிகள், அதன் வழியாக இருக்கலாம்...   சில நேரங்களில் நான் மௌனப்படுகிறேன், எனக்கான ஒரு சொல்லை உங்கள் குரல்வளை ஒலிக்கிறது... காற்று, அதன் ஊடகமாக இருக்கலாம்... காட்சிகள், அதன் வழியாக இருக்கலாம்...   உங்கள் மொத்த வாழ்விலிருந்தும் நான் நீங்கியபிறகு, உங்கள் நினைவுகளில் எப்போதாவது எப்படியாவது நான் எழுவேன்... காற்று, அதன் ஊடகமாக இருக்கலாம்... காட்சிகள், அதன் வழியாக இருக்கலாம்...   ஊமை என்கிறீர்கள் மொழி புரியாத நீங்கள்... வானம் தன் இன்மையால் பேசிக்கொண்டுதான் இருக்கிறது... காற்று, அதன் ஊடகமாக இருக்கலாம்... காட்சிகள், அதன் வழியாக இருக்கலாம்...   பூமிக்கு ஒரு அணு உயரத்தில் வானம் இருக்கிறது, உண்மையில் உலகவாழ்வு மரணத்தால் நீள்கிறது... காற்றை உணர்ந்தவருக்கும், காட்சியை அறிந்தவருக்கும் உலகம் முழுமையடைகிறது..!   - பரிதி  

" உளவியல் - 2 " - பரிதி

படம்
  " உளவியல் - 2 " - பரிதி   Johari Window Technique இது ஒரு மிகச்சிறந்த உளவியல் கூறு. Johari என்பவரால் கூறப்பட்டது.  படத்தை பார்த்துக்கொள்ளுங்கள். நான்கு சாளரங்கள்(windows) உள்ளது. 1) Open window 2) Hidden window 3) Blind window 4) Dark window   Open window நம்மைப்பற்றி நமக்கும் தெரிந்த, மற்றவர்களுக்கும் தெரிந்த விடயங்கள். உதாரணமாக, நமது உயரம், நிறம், நாம் பேசும் மொழி போன்றவை.   Hidden window நம்மைப்பற்றி நமக்கு தெரிந்த, ஆனால் மற்றவர்களிடம் நாம் மறைக்கும் விடயங்கள். கூச்சம் காரணமாகவோ, அச்சம் காரணமாகவோ இருக்கலாம். உதாரணமாக, நாம் நன்றாக வரையலாம் ஆனால் வரைந்து பெட்டியில் பூட்டிக்கொள்வோம். பாடுபவராக இருக்கலாம் தனியாக இருககும்போது மட்டும் பாடிக்கொள்வோம். இன்னும் சொல்வதானால் நம் அந்தரங்கங்கள்(not only sex) எல்லாம் இதில் அடங்கும்.   Blind window நம்மைப்பற்றி நமக்கு தெரியாத, ஆனால் மற்றவர்களுக்கு தெரிந்த விடயங்கள். உதாரணமாக, பொதுவெளியில் நாம் இருக்கும்போது சுற்றியுள்ளவர்களில் யாராவது இப்படிச்சொல்லலாம்... "இப்போ பாரேன் இந்த விசயத்துக்கு இவர் பயங்கரமா கோவப்படுவார்"...

" உளவியல்... - 1 " - பரிதி

படம்
  " உளவியல்... - 1 " - பரிதி   படிக்க ஆகும் நேரம் - 3:50நிமிடங்கள்   வாழ்வின் சில தருணங்களை "ஏன் இப்படி நடந்தது?" என்று புரிந்துகொள்வதன்மூலம் அந்த தருணம் இனியதாக இருக்குமானால் அதை இன்னும் ஆழ்ந்து அனுபவிக்கவும், கசப்பானதாக இருக்குமானால் விட்டு விலகிநிற்கவும் எளிதாக இருக்கும்.   ஆனால், அப்படி எல்லா தருணங்களையும் புரிந்துகொள்ள முடியாது என்று நாம் நினைத்துக்கிடப்போம், வழி தெரியாமல். ஆனால், அதற்கு வழிகாட்டும் ஒரு சரியான முறைதான் உளவியல் பற்றிய அறிதல்கள்.   சமீபத்தில் சில உளவியல் கூறுகளை படிக்கத்தொடங்கினேன். அதில் ஒன்று எனக்கு மிக ஆச்சரியத்தையும், சில தெளிவுகளையும் கொடுத்தது. கட்டாயம் நீங்களும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு உளவியல் கூறுதான் அது. (கட்டுரையின் நீளம் காரணமாக சில பகுதிகளாக வெளியிடும் தேவை உள்ளது.)   அந்த உளவியல் கூறு "PARADIGM SHIFT" - முன்முடிவுகளில் ஏற்படும் மாற்றம். ஒரு கால இடைவெளியில்(அது ஒரு நொடியாக இருக்கலாம். இல்லை, சில நாட்கள், மாதங்கள், ஆண்டுகளாகக்கூட இருக்கலாம்.) நம் மனம் எடுத்த நிலைப்பாட்டில் அப்படியே தலைகீழாக மாறிக்கிடக்கும்.   உதாரணமாக...

சாந்தி - சாதக் ஹசன் மண்டோ audio book

  கதை : சாந்தி ஆசிரியர் : சாதக் ஹசன் மண்டோ(உருது) தமிழுக்கு மொழிபெயர்த்தவர் : ராமானுஜம் ஒலி வடிவில் : இறைவி சிந்தனைக்களம் குரல் : பரிதி கதையெங்கும் நுணுக்கங்கள், வார்த்தைதோறும் உணர்வுகள். பேரன்புகள்..!   ஒலிவடிவில் கதை கேட்க இங்கே சொடுக்கவும் சாந்தி