யட்சி - யட்சன் "Every part of the cosmos draws towards its mate..!" என்று ரூமியின் கவிதை ஒன்று உண்டு. இதற்கு மிகப்பொருந்தும் ஒற்றைச்சொல்தான் யட்சி - யட்சன். யட்சி என்றால் கண்ணுடையவள், இரவில் கண்ணுடையவள் என்று பொருள். இதே ஆண்பாலுக்கென்றால் யட்சன். கண்ணுடையவன், இரவில் கண்ணுடையவன் என்று பொருள். இரவு என்பது எல்லா பொருளையும் தின்று செரித்துவிடும் ஒன்று. இரவினால் செரிக்கமுடியாத ஒன்றே ஒன்று ஒளி. ஒளியை மட்டும் செரிக்கமுடியாமல் வெளித்தள்ளிவிடும். உலகின் எல்லா மனித உயிருக்கும் கண்ணிருக்கிறது. அப்புறம் ஏன் கண்ணுடையவள் என்பதற்கு ஒரு தனிச்சொல்? எந்த மனிதனுக்கும் இருட்டில்/இரவில் கண் தெரியாது. அப்புறம் ஏன் இரவில் கண்ணுடையவள் என்று ஒரு சொல்? ஒவ்வொரு மனிதருக்கும் வெளியே காட்டி வெளிப்படும் ஒன்றும், உள்ளே மறைத்துவைத்திருக்கும் ஒன்றும் இருக்கும். உள்ளிருப்பதென்பது இருளுக்குள் கிடப்பது. உதாரணத்திற்கு, யாரிடமும் குரலுயர்த்திகூட பேசாத, ஒரு ஆழ்ந்த உணர்வுக்கு அவனிடம் வார்த்தைகள் தொலைந்து கண்ணீரே மிஞ்சும் ஒரு ஆண் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஊரிலுள்ள பெண்கள் அவனை கோழை என்று சொல்லும்ப...
கருத்துகள்
கருத்துரையிடுக