இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Before sunrise - திரைப்பட அறிமுகம் - பரிதி

படம்
  Before sunrise (1995) - 101minutes/romantic drama IMDb - 8.1/10, Rotten Tomatoes - 100% Castle Rock Entertainmentன் மற்றொரு ஆகச்சிறந்த படைப்பு. இப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன். இதற்கு முன்புவரை நான் பார்த்த படங்களிலேயே சிறந்த romantic movie என்றால் '2 States' திரைப்படத்தைத்தான் மனதில் வைத்திருந்தேன். ஆனால் இந்த படம் அதை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது. சுருக்கமாக சொல்வதானால், வழிப்போர்கர்களின் காதல். ஒரே ஒரு நாள் தான் கிடைக்கும் என்றாலும், அதில் ஒரு நொடியைக்கூட வீணடிக்காமல் வாழ்ந்து முடிக்கும் காதலர்கள் பற்றித்தான் கதை. இருவர் வாழ்வில் ஒருநாள் எப்படி கழிந்தது, இவ்வளவு தான் கதை. படம் முழுக்க நான் மிக ரசித்தது Celine என்ற கதாபாத்திரத்தைத்தான். அவளின் கண்ணசைவு, உதட்டசைவுகளில் இருக்கும் எதுவுமற்ற வெளிப்பாடு, ஏதோவொரு உண்மை என்று நடிப்பென எடுத்துக்கொள்ளமுடியாதபடிக்கான தோற்றம். இந்த அளவு நான் இதற்குமுன் இரசித்த நடிகை ஒரே ஒருத்திதான். அவள் Eva green. இருவருமே french actress. சரி... கதைக்கு வருவோம்... ஒரு இரயிலில் கதை தொடங்குகிறது. மனம் பொருந்தாத ஒரு இணையின் சண்டையோடு. அதை கேட்கச்சக...

யட்சி - யட்சன்

படம்
 யட்சி - யட்சன் "Every part of the cosmos  draws towards its mate..!" என்று ரூமியின் கவிதை ஒன்று உண்டு. இதற்கு மிகப்பொருந்தும் ஒற்றைச்சொல்தான் யட்சி - யட்சன். யட்சி என்றால் கண்ணுடையவள், இரவில் கண்ணுடையவள் என்று பொருள். இதே ஆண்பாலுக்கென்றால் யட்சன். கண்ணுடையவன், இரவில் கண்ணுடையவன் என்று பொருள். இரவு என்பது எல்லா பொருளையும் தின்று செரித்துவிடும் ஒன்று. இரவினால் செரிக்கமுடியாத ஒன்றே ஒன்று ஒளி. ஒளியை மட்டும் செரிக்கமுடியாமல் வெளித்தள்ளிவிடும்.  உலகின் எல்லா மனித உயிருக்கும் கண்ணிருக்கிறது. அப்புறம் ஏன் கண்ணுடையவள் என்பதற்கு ஒரு தனிச்சொல்? எந்த மனிதனுக்கும் இருட்டில்/இரவில் கண் தெரியாது. அப்புறம் ஏன் இரவில் கண்ணுடையவள் என்று ஒரு சொல்? ஒவ்வொரு மனிதருக்கும் வெளியே காட்டி வெளிப்படும் ஒன்றும், உள்ளே மறைத்துவைத்திருக்கும் ஒன்றும் இருக்கும். உள்ளிருப்பதென்பது இருளுக்குள் கிடப்பது. உதாரணத்திற்கு, யாரிடமும் குரலுயர்த்திகூட பேசாத, ஒரு ஆழ்ந்த உணர்வுக்கு அவனிடம் வார்த்தைகள் தொலைந்து கண்ணீரே மிஞ்சும் ஒரு ஆண் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஊரிலுள்ள பெண்கள் அவனை கோழை என்று சொல்லும்ப...