சிறுகதை - ஆறறிவும் ஆறு கால்களும் - பரிதி வருங்கால உழவன்

ஆறறிவும் ஆறு கால்களும் “ எ ன் இனிய பொன் நிலாவே, பொன் நிலவில் என் கனாவே…” நேரம் இரவு 8:30 மணியைக்கடந்துகொண்டிருந்தது. அம்மா வீட்டின் எல்லா விளக்குகளையும் அணைத்துக்கொண்டிருந்தாள். இராமலிங்கத்தின் அறையில் மட்டும் படிக்கும் மேசையில் இருக்கும் விளக்கு எறிந்துகொண்டிருந்தது. “டேய் ராமு… சீக்கிரமா படு…” என்று கத்தியவளுக்கு “சரிம்மா…” என்று பதிலளித்தான். “சவுண்ட கொறச்சுவை. இந்த பாட்ட அப்படித்தான்டா கேக்கனும். காலைல பூராவும் ஊறச்சுத்தவேண்டியது. ராத்திரி உக்காந்து எழுதிகிட்டு கெடக்கவேண்டியது” என்று புலம்பியபடியே அவள் படுக்கச்சென்றாள். ராமு பதினோறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு செல்கிறான். முழுஆண்டுத்தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. காலை 7 மணியிலிருந்து 9 மணிவரை துணை வகுப்புக்கு போனால் போதும். பள்ளி திறக்க எப்படியும் இன்னும் முழுமையாக ஒரு மாதம் இருக்கிறது. விடுமுறை தொடங்கிய முதல்நாள் இரவில்தான் ராமு எதையோ தீவிரமாக யோசித்து யோசித்து எழுதிக்கொண்டிருந்தான். இடையிடையே விட்டத்தைப்பார்த்து மெல்லமாக சிரித்தபடியும் எழுதிக்கொண்டிருந்தான். அந்த மொத்த அறையிலும் இரு...